ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்படி, 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.
இந்திய அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) அபாரமாக துடுப்பெடுத்தாடி சதம் விளாசினார். ரோஹித் சர்மா 78 ஓட்டங்களைப் பெற்றார்.
இதற்கு முன்னர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணா (Prasidh Krishna) தனது முதல் ஒருநாள் ஐந்து விக்கெட் சாதனையைப் பதிவு செய்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்த வெற்றியின் மூலம், கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) தலைமையில் இந்தியா முதன் முறையாக ஒரு ஒருநாள் தொடரை முழுமையாக வென்றுள்ளது.

















