ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் துணைச் செயலாளர் காதிர் நிசாமிபூரை (Ghadir Nezamipour) தலைநகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு முகமைத் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் துணைச் செயலாளர் கலாநிதி கதிர் நிசாமிபூர், புது டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் என்று தெரிவித்துள்ளது.
நெசாமிபூர் முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்திருந்தார்.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமையன்று புது டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ்நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தின்போது, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையிலான பதட்டம் உச்சத்தை எட்டியது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான ராணுவத் தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாக ஈடுபட்டதாக ஈரானிய அதிகாரிகள் அப்போது அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டினர்.
மேற்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்று முடிவடைந்த பின்னர் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதில், இரு தரப்பினரும் ஒரு உயர்மட்டக் குழுவை அமைக்கவும், 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு செயல்திட்டத்தை வகுக்கவும் ஒப்புக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



















