பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
மிரிஹான பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் தாம் மேற்கொண்ட முதலீடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார்.













