பிரிட்டனின் மிகப்பெரிய தண்ணீர் விநியோக நிறுவனமான ‘தேம்ஸ் வாட்டர்’ (Thames Water), தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளதாக எச்சரித்துள்ளது.
அடுத்த வாரம் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளைப் பொறுத்தே தங்களின் எதிர்கால நிதியுதவிகள் அமையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் ஆண்டு செயல்திறன் அறிக்கையை வெளியிட்ட போதே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
தேம்ஸ் வாட்டர் நிறுவனம் தற்போது தற்காலிகமாக இயங்குவதற்கு 1.1 பில்லியன் பவுண்டுகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
நிறுவனத்தின் முக்கியக் கடன் வழங்குநர்கள் , அடுத்த வாரம் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஆண்டி பர்ன்ஹாமின் மீட்புத் திட்டங்கள் என்ன என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நிதியை வழங்க முடிவு செய்துள்ளனர்.
ஒருவேளை அரசாங்கத்துடன் மீட்புப் பொதி உடன்பாடு எட்டப்படாவிட்டால், தேம்ஸ் வாட்டர் நிறுவனம் ‘சிறப்பு நிர்வாக ஆட்சிமுறைக்கு’ தள்ளப்படும்.
இது அந்நிறுவனத்தைப் புதிய பிரதமர் பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கம் தேசியமயமாக்குவதற்குக் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பர்ன்ஹாம் ஏற்கனவே தண்ணீர் துறையைப் பொதுத்துறை உடமையாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.














