கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் டஜன் கணக்கான தொடர் அதிர்வுகள் ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான அந்த நாட்டின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான உயரமுள்ள சுனாமி அலைகள் பதிவாகின.
நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
சிக்கா ரீஜென்சியில் குறைந்தது இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாகவும் பேரிடர் தணிப்பு முகமையான பிஎன்பிபி (BNPB) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புவி இயற்பியல் முகமையான BMKG, உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4:58 மணிக்கு (2158 GMT) 15 கி.மீ (9 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தைப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து பல அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







