ஆர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, இந்த மாத தொடக்கத்தில் தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமான பின்னர், புதன்கிழமை (19) தனது முதல் கோலை அடித்தார்.
பென்சில்வேனியாவின் செஸ்டரில் உள்ள சுபாரு பூங்காவில் நடைபெற்ற மேஜர் லீக் சாக்கர் (MLS) போட்டியில், பிலடெல்பியா யூனியனுடன் இன்டர் மியாமி அணி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆட்டத்தை முடித்தபோது மெஸ்ஸியின் இந்த கோல் வந்தது.
மெஸ்ஸி தனது கோலை 26 ஆவது நிமிடத்தில் அடித்தார்.
தன்னைத் தடுத்து நிறுத்த முயன்ற வீரரைத் திறமையாகக் கடந்து சென்ற மெஸ்ஸி, இடது காலால் பந்தை வலைக்குள் செலுத்தி மியாமி அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.
இந்த கோலை அடுத்து, உடனடியாக அவரது சக வீரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், 58 ஆவது நிமிடத்தில் பிலடெல்பியா யூனியன் அணியின் நீல் பியர் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
இந்த சமனிலையானது, நடப்பு MLS கிண்ண சாம்பியனான மியாமியின் மூன்று போட்டிகள் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.














