வவுனியாவில் வீடொன்றிற்குள் நுளைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது…
கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுளைந்து வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 16.750 பவுண் தங்கநகை கொள்ளையிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 14 பவுண் நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளி கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு அருகில் வசிப்பர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கொள்ளையிட்ட ஒருபகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளார்.
மேலும் ஒரு தொகுதி நகைகள் வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள பிரபல அடகுநிலையத்தில் அடமானம் வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நகைகளின் பெறுமதி 57 இலட்சத்து 91 ஆயிரம் என பொலிசார் தெரிவித்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட நான்குபேரும் இன்றையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
.













