பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களைக் கைது செய்வதற்காக நேற்று (25) நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின்போது, சந்தேகத்தின் பேரில் மொத்தம் 490 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று நடைபெற்ற நடவடிக்கைகளின் போது மொத்தம் 26,868 பேர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், ‘ஒரு நாள் பிடியாணை’ (day warrants) மற்றும் ‘திறந்த பிடியாணை’ (open warrants) ஆகியவற்றின் கீழ் தேடப்பட்டு வந்த முறையே 228 மற்றும் 148 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், மதுபோதையில் வாகனம் செலத்தியதற்காக 37 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியத்தற்காக 92 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,036 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.













