• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை  மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கம் – கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்!

Dhackshala by Dhackshala
2021/10/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
80 1
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நாட்டில் அமுலாக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், கட்டம் கட்டமாக நீடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 41 நாட்களுக்குப் பின்னர் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை நீக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்  நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி  முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய,

  • சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைவாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க முடியும்.
  • ஆசன எண்ணிக்கையின் அளவுக்கு அமைவாக பயணிப்பதற்கு மாத்திரமே அனுமதி.
  • பொது போக்குவரத்தின் போது குளிரூட்டப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த முடியாது.
  • அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருந்தல் வேண்டும்.
  • நிறுவனங்களுக்கு வரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும்.
  • வீடுகளில் இருந்து வேலை செய்யுமாறு பணியாளர்களை ஊக்குவிப்பது அவசியம். இது அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்புடையது அல்ல.
  • கடமைக்காக அழைக்க வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையை நிறுவனத் தலைவர் தீர்மானிக்கலாம்.
  • வைபவங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் விதத்திலான நிகழ்வுகளுக்கு ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அனுமதியில்லை
  • பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதியில்லை.
  • வீடுகளிலோ, வெளியிலோ விருந்துகள், வைபவங்கள், ஒன்றுகூடல்களை நடத்த முடியாது.
  • திறந்தவெளிச் சந்தைகள், வாராந்த சந்தைகள் போன்றவற்றை பிரதேச சுகாதர மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடத்தலாம்.
  • கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் சனநெரிசல் இல்லாத வகையில் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
  • வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளே 5 பேர் மாத்திரமே இருக்க முடியும் என்பதுடன் ஏனைய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வெளியே ஒரு மீட்டர் இடைவெளியை பேணி வரிசையில் நிற்க வேண்டும்.
  • சிகையலங்கார நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தமக்கான நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
  • திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும்.
  • 200 க்குக் குறைவான மாணவர்களுடன் கூடிய பாடசாலைகள் திறக்கப்படும். அவை திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
  • முன்பள்ளிகளை மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் அரைவாசிப்பேருடன் இயங்க வைக்கலாம்.
  • தனியார் வகுப்புக்களுக்கு அனுமதியில்லை.
  • சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நீதிமன்றங்கள் இயங்க அனுமதி.
  • மதவழிபாட்டுத் தலங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள், ஒன்றுகூடல் போன்றவற்றிற்கு அனுமதியில்லை.
  • திருமண பதிவிற்காக ஒக்டோபர் 15ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரை 50 பேருக்கும் அனுமதி.
  • மரணச் சடங்குகளில் 15ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 15 பேருக்கும் அனுமதி.
  • பூதவுடல் விடுவிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இறுதிக் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும்.
  • உடற்பயிற்சி ஒழுங்கைகள், கடற்கரையோரங்களில் நடமாட மக்களுக்கு அனுமதி உண்டு.
  • இருந்தாலும் 15 ஆம் திகதி வரை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
  • சகல சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்

Related

Tags: ஊரடங்குச் சட்டம்கொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜேர்மனியில் கொவிட் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

Next Post

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

Related Posts

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!
இலங்கை

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
இலங்கை

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் கொலம்பியா தோட்டத்தில்  தீப்பரவல்
இலங்கை

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் கொலம்பியா தோட்டத்தில் தீப்பரவல்

2026-01-15
சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!
இலங்கை

சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!

2026-01-15
இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை
இலங்கை

இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை

2026-01-15
யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்
இலங்கை

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்

2026-01-15
Next Post
கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

பொலிவியாவில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பொலிவியாவில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

0
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

0
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

0
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

0
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

0
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

2026-01-15

Recent News

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்!

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

2026-01-15
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2026-01-15
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

2026-01-15
ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.