சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிங்கப்பூரில் ஒரு இலட்சத்து 497பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 106ஆவது நாடாக விளங்கும் சிங்கப்பூரில் இதுவரை கொவிட் தொற்றினால், ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 966பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 162பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 809பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 26ஆயிரத்து 307பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 41பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



















