• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை மண்ணில் தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்படுகின்றது – ஜயநாத் கொலம்பகே

இலங்கை மண்ணில் தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்படுகின்றது – ஜயநாத் கொலம்பகே

புலிகளின் ஆயுதங்கள் இனி தற்கொலை குண்டுகள் மற்றும் பீரங்கிகள் அல்ல - பிரசாரங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே..!

Dhackshala by Dhackshala
2022/01/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
107 1
A A
0
51
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை மண்ணில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் அந்த அமைப்பு செயற்படுகின்றது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவர்களின் ஆயுதங்கள் இனி தற்கொலை குண்டுகள் மற்றும் பீரங்கிகள் அல்ல என்றும் பிரசாரங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே தற்போது அவர்களின் ஆயுதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் அவர்களின் குறிக்கோள் அப்படியே உள்ளதென்றும் விடுதலைப்புலிகளின் ஈழக்கொள்கை மாறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்’ தொடர்பான அறிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இந்த விடயம் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்ட போதிலும், இந்த நாட்டில் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2008 இல் FBIஆல் பிரகடனப்படுத்தப்பட்ட உலகின் மிகவும் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை போராடுகிறது என்றும் பிரச்சினைகள் அல்லது மீறல்கள் இருந்தால் இலங்கை உள்ளூர் பொறிமுறைகள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் 16 குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்றும் மற்றவர்களை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி மற்றொரு குழுவையும் நியமித்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 பேர் கொண்ட மற்றொரு குழு விடுவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் மேம்படுத்தும் அதே வேளையில், பொறுப்புக்கூறல், காணாமல் போனோர், பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல், நல்லிணக்க முயற்சிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் போன்ற பிரச்சினைகளை உள்நாட்டில் தாங்கள் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: தமிழீழ விடுதலைப் புலிகள்ஜயநாத் கொலம்பகே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Next Post

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது – இன்சாகாக் அறிவிப்பு!

Related Posts

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!
இலங்கை

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-05-20
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இலங்கை

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-05-20
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!
இலங்கை

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

2026-05-20
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!
இலங்கை

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

2026-05-20
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-05-20
நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கை

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-05-19
Next Post
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது – இன்சாகாக்  அறிவிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது - இன்சாகாக் அறிவிப்பு!

நிதி வழங்கியது மத்திய வங்கி – எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு !

எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை!

தலிபான்களுடன் மேற்கு நாடுகளின் அதிகாரிகள் முதல் முறையாக பேச்சுவார்த்தை!

தலிபான்களுடன் மேற்கு நாடுகளின் அதிகாரிகள் முதல் முறையாக பேச்சுவார்த்தை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

0
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

0
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

0
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

0
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-05-20
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-05-20
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

2026-05-20
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

2026-05-20
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-05-20

Recent News

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-05-20
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-05-20
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

2026-05-20
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.