• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவமும் தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்காலமும்!

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவமும் தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்காலமும்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/09
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அதன் உலகளாவிய தொலைநோக்கு மற்றும் மூலோபாயத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பைப் ஜி-20 இற்கான தலைமைத்துவத்தினை வழங்குவதன் ஊடாகப் பெறப்போகின்றது.

இந்தியா கடந்த டிசம்பர் முதலாம் திகதி இந்தோனேசியாவில் வைத்து அந்நாட்டிடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதோடு இந்த ஆண்டின் செப்டெம்பர் 09 மற்றும் 10 திகதிகளில் புதுடில்லியில் ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

சர்வதேச நிதி நிலைத்தன்மை, காலநிலை மாற்றம் தணிப்பு, மற்றும் நிலையான வளர்ச்சி, உலகப் பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த கட்டமைப்பு செயற்படுகிறது.

32 வேறுபட்ட பணிநிலைகளில் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை இந்தியா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள இந்தியா மேலும் ஜி20 பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்களுக்கு இந்தியாவின் செழுமையான கலாசார பாரம்பரியத்தைப் பற்றிய பார்வையை வழங்குவதற்கும் அவர்களுக்கு ஒரு தனித்துவமான இந்திய அனுபவத்தை வழங்குவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.

இந்தியாவின் ஜி-20இற்கான தலைமைத்துவமானது தெற்காசியப் பிராந்தியத்திற்கு, குறிப்பாக இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு ஜி20 அமைப்பின் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறித்து அண்மையில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜி20 ஜனாதிபதி பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடப்பட்டது.

இருவரும் புதுடில்லியில் சந்தித்து, குழுவின் இந்தியாவின் தலைவராக இருந்தபோது, ஜி20 உடன் இலங்கை ஈடுபடுவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். சர்வதேச நிதி ஒத்துழைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஜி20  அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

இதேவேளை, தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பீடத்தின் சர்வதேச உறவுகள் துறையின் தலைவரும் முனைவருமான, ஃபர்ஜனா ஷர்மின், இந்த மாநாட்டின் மூலமாக இந்தியா தெற்காசியாவிற்கு பாரிய முன்னேற்றகரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.  இந்தியா ஜி-20 தளத்தைப் பயன்படுத்தி புவிசார் அரசியல் பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்க்கவும், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருக்க முடியும், ‘என்று ஃபர்ஜனா  ஷர்மின் கூறினார்.

இவ்வாறிருக்கையில், ஜி-20இன் தலைவராக, இருக்கும் இந்தியா தெற்காசியப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம், உள்ளிட்ட இலக்குகளைப் பின்தொடர்வது, சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, உரங்கள் மற்றும் எரிபொருள் பாதுகாப்பு ஆகியவை தெற்காசியப் பிராந்தியத்திற்கு மிகவும் முக்கியமான விடயங்களாக காணப்படுகின்றன.

ஆகவே இந்த விடயங்களை இந்தியா கரிசனை கொள்ளும் பட்சத்தில் தெற்காசியப் பிராந்தியம் தொடர்பில் இந்தியா உலகளாவிய ரீதியில் குரல் கொடுக்க முடியும், மேலும் வளரும் நாடுகளை பாதிக்கும் நிகழ்ச்சி நிரல்களையும் முன்வைப்பதற்கும், சர்வதேச நிறுவனங்கள், சுகாதாரம், கல்வி, பாலினம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை தொடர்பான விடயங்களில் அதிகமான ஈடுபாட்டைக் காண்பிப்பதற்கான வழிகளை ஏற்படுத்தவும் இந்தியாவுக்கு இயலுமானதாக இருக்கும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்பொழுதும் அதன் அண்டை நாடுகளுக்கு முதன்மையளிப்பது முன்னிலைப்படுத்தியிருப்பதால், பிராந்தியத்தின் பெரிய நலனை மனதில் கொண்டு இந்தியா தன்னுடன் ஏனைய நாடுகளையும் கூட்டாக வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கே திட்டமிட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக தெற்காசிய வலமே மேம்படுவதற்கு வித்திடுவதாக இருக்கின்றது. அந்த வகையில் ஜி20இற்கான இந்தியாவின் தலைமைத்துவமானது, தெற்காசியவிற்கு புதிய விதியை எழுதுவதாக அமையும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமஷ்டி அதிகாரப் பகிர்வு வேண்டும்- அம்பாறையில் சத்தியாக்கிரக போராட்டம்!

Next Post

தலாய்லாமாவினால் வரமுடியுமா?

Related Posts

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

2026-06-15
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி!

2026-06-15
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!
இந்தியா

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

2026-06-15
இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!
இந்தியா

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!

2026-06-14
2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!
இந்தியா

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

2026-06-12
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு!
இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு!

2026-06-11
Next Post
தலாய்லாமாவினால் வரமுடியுமா?

தலாய்லாமாவினால் வரமுடியுமா?

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

சுதந்திரத்தின் பின்னரான வலுவான இந்திய, இலங்கை உறவுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

0
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

0
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

2026-06-16
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-16
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15

Recent News

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

2026-06-16
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-16
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.