அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுச் சூழல் மாசடைந்து காணப்படுவதாகவும், வீதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதசாரிகளும் சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கல்முனை மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்முனை மக்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
@athavannews கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குலைவு போக்குவரத்துக்கும் இடைஞ்சல்! #lka #colombo #AthavanNews #news















