கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து மூன்று T-56 துப்பாக்கிகள் 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது குறித்த துப்பாக்கிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் T-56 மகசின் போலியானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிகள் தொடர்பான விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில் அவை போலியானவை என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















