எல்ல – வெல்லவாய வீதியில் கடந்த 04 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதியின் இரத்த மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சாரதி மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் அறிவதற்காகவே,
குறித்த நடவடிக்கையை எடுக்க தீர்மானித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு எல்ல வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்து சாரதி உட்பட 15 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் விபத்து ஏற்பட்ட போது அவர் ஏதேனும் போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் உறுதி செய்ய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.















