விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சமர்ப்பணங்களை பரிசீலித்த குருநாகல் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடத்தல் மற்றும் கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கடந்த ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

















