கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு மூன்றாம் நிலை அதாவது ‘சிவப்பு’ மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள ‘சிவப்பு’ மண்சரிவு எச்சரிக்கை நாளை (19) அதிகாலை 2:30 மணி வரை அமுலில் இருக்கும்.
தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.
















