யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்றய தினம் சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மருதங்கேணி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி கடற்கரை பகுதி முழுவதும் ஓர் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இதன் போது மருதங்கேணி கடற்கரை பகுதியில் வாடி ஒன்றில் தங்கி இருந்து கடற்தொழில் செய்யும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த சுதர்சன எனும் 39 வயதுடைய நபரின் உடமையில் இருந்து 4.780கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் ஐஸ் போதைப் பொருளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதி மன்றத்தில் நேற்றைய தினம் மருதங்கேணி பொலிசால் முற் படுத்தப்பட்டது
ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை செய்ய மருதங்கேணி பொலிசார் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் மேலும் மூன்று நாட்கள் குறித்த சந்தேகநபரை பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கினார்












