• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/13
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter
வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் புதுச்சேரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதேவேளை நெடுந்தீவு மற்றும் அனலைதீவு கடற்பரப்பிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றன.
இவ்வாறு அவர்கள் இலங்கை கடற்பரப்பினை அழித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மீனவர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் பாரத பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். பாரத பிரதமருக்கு கடிதத்தினை எழுதி தொடர்ந்து அரசியல் நாடகத்தினை செய்யாதீர்கள்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் முதலாளி வர்க்கத்தினரிடம் தான் இந்த இழுவைமடித் தொழில்கள் இருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் தான் எமது கடல் வளத்தை அழிக்கின்றனர். முதலமைச்சர் நினைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து இழுவைமடித் தொழில்களையும் நிறுத்தலாம்.
நீங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினாலேயே எமது மனம் வேதனை அடைகிறது. தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற தன்னுடைய மீனவர்களை, நான்கு வருடங்களாக பதவியில் இருக்கின்ற முதலமைச்சர் கட்டுப்படுத்தாமல் அந்த பிரச்சினையை அரசியலாக்குவது நல்லதல்ல. அவர்களுடைய மீனவர்கள் எங்களுடைய எல்லைக்குள் வராமல் கட்டுப்படுத்துவதே நல்ல விடயம்.
அதேபோல இலங்கையில் மலையகத்தில் எமது சொந்தங்கள் 200 வருடங்களுக்கு மேலாக பல இன்னல்களை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நெருக்கடியை தீர்ப்பதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடிக்கு  கடிதங்களை எழுதி அரசியல் செய்யாதீர்கள். வடக்கு மக்களையும், மலையக மக்களையும் புறந்தள்ளி அரசியலை முன்னே கொண்டு செல்வதை தமிழக முதலமைச்சர் நிறுத்த வேண்டும்.
முதலமைச்சரே நீங்கள் நினைத்தால் இந்த சட்டவிரோத தொழிலுக்கும், இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கும் நாளையே தீர்வினை வழங்க முடியும். வடக்கு தமிழ் மீனவர்களின் ஆதங்கமும், கடல் வலிகளும் உங்களையே சாரும் என்றார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateA. AnnarasaFishermen's FederationNarendra ModiNorthern Province
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு ஒரு பெருமையான தருணம்!

Next Post

யாழ் மாவட்ட செயலரை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள்

Related Posts

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!
இலங்கை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

2026-08-26
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!
இலங்கை

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

2026-08-26
நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!
இலங்கை

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

2026-08-26
அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!
அமொிக்கா

அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

2026-08-26
Next Post
யாழ் மாவட்ட செயலரை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள்

யாழ் மாவட்ட செயலரை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள்

பொருட்கள் சேவையில் கடந்த ஆண்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் 175% வளர்ச்சி!

பொருட்கள் சேவையில் கடந்த ஆண்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் 175% வளர்ச்சி!

ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம்

ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

0
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

0
நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

0
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

2026-08-26
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

2026-08-26
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

2026-08-26
நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.