தனது 5 வயது மகள் மீது தாக்குதல் நடத்தி, அதனை காணொளி பதிவு மேற்கொண்டு, வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நபர் ஒருவரை இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த 8 ஆம் திகதி கொழும்பு, மாதம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் கொழும்பு 15 இல் உள்ள ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கையின் போது, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரிகளை எதிர்த்ததாகவும், கைது நடவடிக்கையைத் தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













