• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/10
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

இதேவேளை, கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும், இதனால் அக்காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வு காண்பதற்காக ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலப்பகுதியிலேயே, இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டு உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் கிளையை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும், என வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலின் போது, வவுனியாப் பல்கலைக்கழகம் மன்னாரில் தமது பீடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா,

முல்லைத்தீவில் எமக்கு ஒதுக்கப்பட்ட காணியில் செயற்பாடுகளை ஆரம்பிக்க நாம் தயாராகவே உள்ளோம்.

எனினும், போதிய நிதி ஒதுக்கீடுகள் இன்மை காரணமாகவே தாமதம் ஏற்பட்டது, எனத் தெளிவுபடுத்தினார்.

இதற்குத் தீர்வாக, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, பல்கலைக்கழகத்தின் ஆரம்பக்கட்ட கட்டுமானப் பணிகளுக்காக ஒரு தொகுதி நிதியை வழங்குவதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிப்பதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் இதன்போது உறுதியளித்தார்.

பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 44 ஏக்கர் காணிக்குரிய எல்லைகளை உடனடியாக அளவீடு செய்து, வேலி அமைக்கும் பணிகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் ஆரம்பிக்கும் எனத் துணைவேந்தர் உறுதியளித்தார்.

வேலி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலகம் வழங்கும் நிதி உதவியுடன் படிப்படியாகக் கட்டட நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சார்பில் பிரதிநிதிகள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

blank blank

Related

Tags: mullaiteevusrilanka newsUniversity of Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்

Next Post

பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

Related Posts

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது
இலங்கை

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

2026-02-10
புதிய உறுப்பினர்கள்  தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!
இலங்கை

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும் நாடாளுமன்றம்

2026-02-10
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

தனது 5 வயது மகளை தாக்கிய நபர் கைது!

2026-02-10
LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறுவதாக அறிவிப்பு
இலங்கை

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறுவதாக அறிவிப்பு

2026-02-10
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியை விரிவுபடுத்த திட்டம்
இலங்கை

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியை விரிவுபடுத்த திட்டம்

2026-02-10
1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாலர்கள் மகிழ்ச்சி!
இலங்கை

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாலர்கள் மகிழ்ச்சி!

2026-02-10
Next Post
பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

0
முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

0
தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்

தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்

0
முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

0
புதிய உறுப்பினர்கள்  தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும் நாடாளுமன்றம்

0
பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

2026-02-10
முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

2026-02-10
தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்

தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்

2026-02-10
முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

2026-02-10
புதிய உறுப்பினர்கள்  தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும் நாடாளுமன்றம்

2026-02-10

Recent News

பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

2026-02-10
முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

2026-02-10
தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்

தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்

2026-02-10
முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

2026-02-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.