தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்ததால் நடந்த மோதலில் ஐ.நா. அமைதிப்படையினரும் இஸ்ரேலிய வீரர்களும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
எல்லை தாண்டி ரொக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை வீசியுள்ள ஹிஸ்புல்லா போராளிகளை தெற்கு லெபனானிலிருந்து வெளியேற்ற இஸ்ரேல் முயன்று வருகிறது.
இந்த நடவடிக்கை ஒரு நீடித்த ஆக்கிரமிப்பாக மாறக்கூடும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் மூன்று ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஐ.நா. பாதுகாப்பு சபை இந்த நிலைமை குறித்து விவாதிக்க உள்ளது.
எனினும், இவர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதேவேளை, இந்தத் தாக்குதலில் தங்களது மேலும் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இன்று அதிகாலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் ஈரானிய அதிகாரிகளும் தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்து முரண்பட்ட அறிக்கைகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.













