வரவிருக்கும் கால்பந்து உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலி அணியைச் சேர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்டத் தூதர் ஒருவர் ஃபிஃபாவிடம் (FIFA) கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ளை மாளிகை, ஃபிஃபா, இத்தாலிய கால்பந்து கூட்டமைப்பு (FIGC) மற்றும் ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு (FFIRI) ஆகியவை, இது தொடர்பான கருத்துக்கான கோரிக்கைகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
ஈரான் போர் தொடர்பாக திருத்தந்தை 14 ஆம் போப் லியோவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் விமர்சனங்களைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பைச் சரிசெய்யும் முயற்சியே இந்தத் திட்டம் என இவ்விவகாரத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இத்தாலி தேசிய அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை கடந்த மார்ச் மாதம் இழந்தது.
ஃபிஃபா உலகக் கிண்ணத்தை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
போட்டியில், ஈரான் தனது மூன்று குழுநிலை ஆட்டங்களையும் அமெரிக்காவில் விளையாட உள்ளது.
பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கிய உடனேயே, ஆசியாவின் சிறந்த அணிகளில் ஒன்றாக 2025 மார்ச்சில் உறுதிசெய்யப்பட்ட உலகக் கிண்ண நுழைவை நிறைவேற்றுவதற்கான ஈரானின் திறன் மற்றும் விருப்பத்தின் மீது சந்தேகம் எழுந்தது.
2026 மார்ச் மாதத்தின் முதல் பாதியில், ஈரான் அரசாங்க அதிகாரிகள், தங்கள் அணியால் உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாது என்றும், அமெரிக்காவுக்குப் பயணிக்க முடியாது என்றும், மேலும் ஈரானின் ஆட்டங்களை ஃபிஃபா மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு விதங்களில் தெரிவித்தனர்.
இருப்பினும், ஃபிஃபா அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டதுடன், உலகக் கிண்ணத்தை திட்டமிட்டபடி நடத்துவது குறித்தும் நம்பிக்கையுடன் உள்ளது.















