டுபாயை தளமாகக் கொண்ட சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ளமையினால் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது
சேவை வழங்குநர் ஒருவருக்குச் செலுத்தப்பட வேண்டிய 9 லட்சத்து 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்ஸ் பணம் கிடைக்கவில்லை என டுபாயில் உள்ள சேவை வழங்குநருக்கு கிடைக்கப்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் -அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஊடாக இடம்பெற்றதாகக்கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்
இந்த பிண்ணனியில் ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் இந்தியாவின் சென்னை இலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளது.
சேவை வழங்குநர் ஒருவருக்குச் செலுத்தப்பட வேண்டிய 9 லட்சத்து 74,000 ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹம்ஸ் பணம் கிடைக்கவில்லை என டுபாயில் உள்ள சேவை வழங்குநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ளமையினால் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது
உத்தியோகபூர்வ தொடர்பாடல் ஊடாக போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், உண்மையான சேவை வழங்குநருடன் தான் தொடர்பில் உள்ளதாக வெளிப்படுத்தி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணத்தை செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன் மின்னஞ்சல் ஊடுருவல் கண்டறியப்பட்டு அந்த வங்கிக் கணக்கிற்கான மேலதிக கொடுப்பனவுகள் உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், இது குறித்து டுபாய் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
மின்னஞ்சல் ஊடுருவல் முற்றிலும் சேவை வழங்குநரின் கட்டுப்பாட்டிற்குள் இடம்பெற்றதாகவும் எனவே, பணம் கிடைக்கப் பெறாமைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது என அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
இதேவேளை இந்தியாவின் சென்னை அலுவலகத்தில் உள்ள நிதிப் பிரிவில் பணிபுரிந்த இந்தியப் பிரஜைகளான சில ஊழியர்கள், போலிப் பட்டியல்கள் மற்றும் போலிக் கையெழுத்துகளைப் பயன்படுத்தி நீண்டகாலமாக சுமார் 22 மில்லியன் இந்திய ரூபாவை மோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைமைப் பணிமனை, வழக்கத்திற்கு மாறான பணப் பரிமாற்றங்களை அவதானித்து உள்ளக விசாரணையை முன்னெடுத்திருந்தது
உள்ளக விசாரணைகளைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இந்திய சட்ட அமுலாக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இழப்பீட்டை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஊடாக இடம்பெற்றதாகக்கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஊடகவியலாளர்களின்hல் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்














