பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று மாலை 2.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலஸ்மா அதிபர், பிரதி காவல்துறை மா அதிபர்கள், பெருந்தோட்ட கம்பெனிகளின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பெருந்தோட்டத் துறையில் நிலவும் பாதுகாப்பு சவால்கள், அடக்குமுறைகள் தொழிலாளர் நலன் மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று மாலை 2.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.













