சர்வதேச தேயிலை தினம் இன்று கொண்டாடப்படடுகின்றது.
‘நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
இந்தியாவின் அசாம் மாநிலத் தேயிலை தோட்டத்தில் சீனத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் முன்னெடுத்த சம்பளப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச தேயிலை தினம் பிரகடனம் செய்யப்பட்டது.
இலங்கை, இந்தியா, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, பங்காளதேஷ், கென்யா, மலாவி, மலேசியா, உகண்டா, தன்சானியா ஆகிய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.













