உத்தரபிரதேசத்தில் கடுமையான புயல் வீசியதால், கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
ஹமீர்பூரில் உள்ள பெத்வா ஆற்றின் குறுக்கே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்போது, திடீரென கடுமையான புயல் காற்று வீசிய நிலையில், பாலம் சரிந்து விழுந்துள்ளது.
இதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் நடந்து இடம்பெறுகின்றது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
















