பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் முடிவுகளை எடுக்கும்போது சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற தற்போதைய சட்ட விதியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் கெமி பேடனோக் (Kemi Badenoch) வலியுறுத்தியுள்ளார்.
பொதுத்துறை சமத்துவக் கடமை (PSED) என்ற இந்தச் சட்ட விதியானது, தற்போது சமூகத்தில் “அபாயகரமான மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரல்களை” ஊக்குவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக கெமி பேடனோக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சட்டம் காரணமாக , பொதுத்துறை எடுக்கும் ஒவ்வொரு முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க முடிவுகளும் தேவையற்ற சட்ட சவால்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரிட்டனில் நடந்த ‘ஹென்றி நோவக்’ (Henry Nowak) என்பவரின் படுகொலை மற்றும் அது தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கை ஆகியவை, அங்குள்ள சமத்துவக் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள பின்னணியில் பேடனோக்கின் இந்த உரை வெளியாகிறது.














