104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் (05) யாழ்ப்பாணத்தில் உந்துருளி பேரணியானது இடம்பெற்றது.
இது யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியானது சாவகச்சேரியில் ஆரம்பமான நிலையில் வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து கூட்டுறவு கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வின் தலைவர் மற்றும் விருந்தினர்களது உரை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டுறவாளர்கள், பணியாளர்கள், வங்கி அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.












