போதைப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தெஹிவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) தெரிவித்தார்.
26 வயதான குறித்த பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் தீவிரமாக இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














