• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை  வெளிப்படையாக கூறவேண்டும் – ஜனா

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் – ஜனா

shagan by shagan
2021/04/02
in முக்கிய செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கலந்துகொண்ட கூட்டத்திற்கு எங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கடந்த 23ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபரினால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்குபற்றி ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு கூறியிருந்தார்கள்.ஆனால் நேற்று முன்தினம் புதன்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்புகொண்டு உங்களை இந்த கூட்டத்திற்கு அழைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள்,அதனால் அந்த கூட்டத்திற்கு சமூகமளிக்கவேண்டாம் என்று கூறினார்.

பின்னர் நேற்று (வியாழக்கிழமை) காலையில் தொலைபேசியில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவந்துள்ளதாக தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல்ராஜபக்ஸ இதனை கூறினாரா அல்லது இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்ந்து செயற்படும் இராஜாங்க அமைச்சர் இருக்கின்றார்,மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் இருக்கின்றார்.யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறவேண்டும்.

அரசாங்க அதிபரினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மேலாக தொலைபேசியூடாக எங்களை வரவேண்டாம் என்று சொல்லுமளவிற்கு அரசாங்க அதிபரிற்கு அழுத்தம் கொடுத்த போலி முகங்களை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறுவாரா என்பதை கேட்க விரும்புகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அமைச்சர்களிற்கு பக்கத்தில் சென்று உட்கார்ந்திருக்க வேண்டும், அவர்கள் கூட்டத்திலே பரிமாறும் சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும், அதன் மூலம் வெளிவருகின்ற புகைப்படங்கள்,பிரசாரங்கள் மூலமாக எங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று அந்தக் கூட்டங்களில் பங்குபெறுவதில்லை.

அமைச்சர் என்பவர் குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது குறிப்பிட்ட இனத்திற்கோ சொந்தமானவரல்ல. முழு நாட்டிற்கும் உரித்தானவர். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பிலே அதிகூடிய பெரும்பான்மையை பெற்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கின்றோம்.

நாங்கள் இப்படியான கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளை காண்பதற்காகவே இப்படியான கூட்டங்களுக்கு செல்கின்றோம்.

கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றபோது ஆமாம் சாமி போட்டுக்கொண்டு அரசாங்கத்திற்கு கூஜா தூக்குகின்றவர்களைப்போல நாங்கள் அங்கு இருப்பதில்லை.

மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றபோது அவ்விடயம் பத்திரிகைகளில் வரும்போது தங்களுக்கு அவமானமாக இருக்கும் என நினைத்துத்தான் அரசாங்க அதிபருக்கு இப்படியான அழுத்தங்களை கொடுக்கின்றார்களா என்பது தெரியவில்லை.

அரசாங்க அதிபர் இப்படியான அரசியல்வாதிகளுக்கு கைப்பொம்மையாக இருக்காமல் மாவட்ட அபிவிருத்தியை கருத்தில்கொண்டு அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அபிவிருத்தி சார்ந்த கூட்டங்களுக்கு அழைத்தால்தான் எமது மாவட்டத்தையும் மக்களையும் முன்னேற்றக்கூடியதாக இருக்கும்.

இப்படியான அரசியல்வாதிகள் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையிலே இவர்கள் அத்தனைபேரின் முகங்களும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் கதைப்பதை கேட்டுக்கொண்டு இருப்பதற்காக இப்படியான கூட்டங்களுக்கு செல்வதில்லை என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு அரசாங்க அதிபர் இப்படியான போலி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும்.
இம்மாவட்ட மக்களினால் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உரிமை மறுக்கப்படும்போது எங்களுக்கு வாக்களித்த அத்தனை வாக்காளர்களையும் நீங்கள் ஒதுக்குவதாகவே நாங்கள் கூறுவோம்.

எதிர்வரும் காலங்களில் மாவட்ட அரசாங்க அதிபர் இப்படியான போலி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் மாவட்ட மக்களையும் மாவட்டத்தின் முன்னேற்றத்தையும் கருதி செயற்பட வேண்டும்” என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திங்களன்று ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான அமைச்சரவை அறிக்கை கையளிக்கப்படும் !

Next Post

மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக வைப்பு!

Related Posts

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது
இலங்கை

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!
இங்கிலாந்து

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!
இலங்கை

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

2026-06-19
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 
இங்கிலாந்து

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
Next Post
மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக வைப்பு!

மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக வைப்பு!

ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராயப்பு ஜோசப்- முஸ்லிம் காங்கிரஸ்

ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராயப்பு ஜோசப்- முஸ்லிம் காங்கிரஸ்

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

முகநூல் ஊடாக அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

0
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

0
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-06-19
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

2026-06-19
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

2026-06-19

Recent News

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

2026-06-19
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-06-19
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

2026-06-19
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.