• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

யாழில் மருத்துவ வசதிகள் மட்டுப்பாடு- மக்களே அவதானம்!

Litharsan by Litharsan
2021/05/07
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
96 1
A A
0
யாழில் மருத்துவ வசதிகள் மட்டுப்பாடு- மக்களே அவதானம்!
41
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “யாழ். மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் ஆயிரத்து 688 பேர் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி யுள்ளார்கள் என்பதுடன் 21 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனைவிட தற்போது இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், யாழில் ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 261 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்திய அளவிலும் சில விடயங்களுக்குத் தடை விதித்தும் இருக்கின்றோம்.

தற்போது, பொலிஸார் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சில முன்னேற்ற நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதாவது, ஏற்கனவே கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இருந்த இரண்டு சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் சில சிகிச்சை நிலையங்களைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றும் கிளிநொச்சியிலும் 230 கட்டில்களுடன் ஒரு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்துள்ளோம். அத்தோடு மருத்துவமனைகளையும் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவசர சிகிச்சைக்குரிய கட்டில்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. எனவே, அதனையும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் எடுத்துள்ளார்கள்.

எனவே, மட்டுப்படுத்தப்பட் வைத்திய வசதிகள் காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

புதிய வீரியம்மிக்க வைரஸ் பரவல் நாட்டில் இருக்கின்றமையினால் சுகாதார நடைமுறைகளைப் பொதுமக்கள் இறுக்கமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்” என அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதி முழுமையாக நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதியில் 11 நோயாளர் படுக்கைகளும் , நான்கு அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்களும் உள்ள நிலையில் அவையனைத்தும் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவுடன் நிரம்பியுள்ளன.

அத்துடன், குறித்த விடுதியில் தங்கி சிகிச்சைபெற்று வருவோர் 50 வயதுக்கும் கீழானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Kanapathipillai Mahesanகணபதிப்பிள்ளை மகேசன்கொரோனா தொற்றுயாழ்ப்பாணம்
Share16Tweet10Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

இலங்கைக்கு உதவும் எண்ணம் எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர்
இலங்கை

இலங்கைக்கு உதவும் எண்ணம் எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர்

2022-07-07
வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!
இலங்கை

பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு?

2022-07-07
தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு கோரிக்கை!
இலங்கை

தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு கோரிக்கை!

2022-07-07
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!
இலங்கை

எரிபொருள் நெருக்கடி – பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை

2022-07-07
யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!
இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!

2022-07-07
ஜனாதிபதிக்கு 73ஆவது பிறந்தநாள் – கோட்டா கோ கம ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 73 நாட்கள்!
இலங்கை

மக்களின் போராட்டத்தினை முடக்கும் நோக்கில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தயாராகின்றது அரசாங்கம்?

2022-07-07
Next Post
மிகுதிப் பணம் கேட்டதால் மிரட்டல்: யாழ். – வவுனியா தனியார் பேருந்தில் நடந்த சம்பவம்!

மிகுதிப் பணம் கேட்டதால் மிரட்டல்: யாழ். - வவுனியா தனியார் பேருந்தில் நடந்த சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

200 ரூபாய்க்கும் குறைவாக ஒரு லீட்டர் எரிபொருள்?

2022-07-07
இலங்கைக்கு உதவும் எண்ணம் எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு உதவும் எண்ணம் எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர்

2022-07-07
வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு?

2022-07-07
உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் பொரிஸ்!

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்யும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்?

2022-07-07
தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு கோரிக்கை!

தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு கோரிக்கை!

2022-07-07
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

எரிபொருள் நெருக்கடி – பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை

2022-07-07

Recent News

இலங்கைக்கு உதவும் எண்ணம் எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு உதவும் எண்ணம் எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர்

2022-07-07
வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு?

2022-07-07
உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் பொரிஸ்!

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்யும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்?

2022-07-07
தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு கோரிக்கை!

தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு கோரிக்கை!

2022-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.