• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 35பேர் உயிரிழப்பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 35பேர் உயிரிழப்பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்!

Anoj by Anoj
2021/07/20
in உலகம்
75 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஒரு நெரிசலான சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 35பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈத் அல்-ஆதா பண்டிகைக்கு முன்னதாக நேற்று (திங்கட்கிழமை) வடக்கு சதர் நகரில் உள்ள வஹைலத் சந்தையில், இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடந்ததாக ஈராக்கின் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பாக்தாத்தில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு இதுவாகும்.

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும். வெடிப்பின் விளைவாக சில கடைகள் எரிக்கப்பட்டன.

குண்டுவெடிப்புக்குப் பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சிகளில், பாதிக்கப்பட்டவர்களின் உடல் பாகங்கள் சலசலப்பான சந்தையில் சிதறிக்கிடந்தன.

நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த சந்தை பகுதியில், பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள மத்திய பொலிஸ்துறை படைப்பிரிவின் தளபதியைக், கைது செய்யப் பிரதமர் முஸ்தபா அல் காதிமி உத்தரவிட்டுள்ளார் எனக்கூறியுள்ள ஈராக் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர், இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் வெடிகுண்டு இருந்த அங்கியை வெடிக்கச் செய்தார் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

2017ஆம் ஆண்டின் இறுதியில், சுன்னி முஸ்லிம் ஜிகாதி குழுவுக்கு எதிரான சண்டையில், தாங்கள் வெற்றி அடைந்ததாக ஈராக் அறிவித்தது.

ஆனால், அந்த ஜிகாதி குழுவை சேர்ந்த சிலர் இன்னும் நாட்டில் உள்ளனர். பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் வாழும், சத்ர் நகரத்தில் உள்ள ஒரு சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

கடந்த ஜனவரி மாதம் தயரன் சதுக்கத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலையும் தாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ் கூறியது. இந்த குண்டு வெடிப்பில் 32பேர் உயிரிழந்தனர். மூன்று ஆண்டுகளில் தலைநகர் பாக்தாத்தில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு இதுதான்.

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்

Next Post

ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவு சபாநாயகரால் நிராகரிப்பு

Related Posts

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

2025-12-02
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
அவுஸ்ரேலியா

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025-12-02
வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!
உலகம்

வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!

2025-12-02
ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!
உலகம்

ஹொங்கொங் தீ விபத்து: விசாரணைக்காக சுயாதீன குழு!

2025-12-02
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
ஆசியா

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
Next Post
ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவு சபாநாயகரால் நிராகரிப்பு

ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த முன்மொழிவு சபாநாயகரால் நிராகரிப்பு

அமெரிக்காவில் காட்டுத்தீ: 3,00,000 ஏக்கர் பரப்பளவு தீக்கிரை- 2,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவில் காட்டுத்தீ: 3,00,000 ஏக்கர் பரப்பளவு தீக்கிரை- 2,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

215,641 பேருக்கு நேற்று ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டன - சுகாதார அமைச்சு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

0
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

0
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

0

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

2025-12-02
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

2025-12-02
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

2025-12-02

Recent News

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

2025-12-02
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.