• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!

Yuganthini by Yuganthini
2021/08/28
in இந்தியா
74 1
A A
0
பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய சிறைகளில் கடந்த 4 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் மீனவர்களை, நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா விடுவித்துள்ளது.

குறித்த கைதிகள், கடந்த 2017 ஆம் ஆண்டில் சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழைந்ததற்காக இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்த கைதிகள், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் எத்தி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் இவ்விடயம் தொடர்பாக கூறியுள்ளதாவது, இவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் இரண்டு மீனவர்களும் ஒரு குடிமகனும் அடங்குவர் என்று பைசல் எத்தி கூறியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பைசல் எத்தி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, விடுதலை செய்யப்பட்ட அல்லாபக்ஷ், முபாரக் மற்றும் யூனுஸ் ஆகியோர் வாகா எல்லை வழியாக லாகூரை அடைந்தனர். ஆனால், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் சட்ட திட்டங்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதில் இரண்டு மீனவர்களும் கராச்சியைச் சேர்ந்தவர்கள், குடிமகன் தட்டாவைச் சேர்ந்தவர். இவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அனுமதி முடிந்ததும், எங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட கைதிகளை அவர்களின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டோம்.

அந்தவகையில் கடந்த 20ஆம் திகதி, மாலை 5 மணிக்கு கராச்சி எக்ஸ்பிரஸ் வழியாக, குறித்த மூவரும் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

எத்தி அறக்கட்டளை அடிக்கடி பாகிஸ்தான் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களுக்கு உதவி செய்து, அவர்களை திருப்பி அனுப்ப உதவியது.

நாங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை மீண்டும் அவர்களது இடத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே அமைதியை ஊக்குவிக்கும் ஒரு என்.ஜி.ஓ ஆன அகாஸ்-இ-தோஸ்தி வெளியிட்ட ஒரு பட்டியலின் படி, இந்திய சிறைச்சாலைகளில் 67 பாகிஸ்தானியர்கள் தங்களது தண்டனையை காலத்தை நிறைவு செய்து, சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்கு காத்திருக்கின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட இரு அரசாங்கங்களுக்கிடையிலான தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் கீழ், ஜனவரி 1, 2021 அன்று பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே பரிமாற்றப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: பாகிஸ்தான்மீனவர்
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்
இந்தியா

மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!

2022-08-10
உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்
இந்தியா

உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

2022-08-08
துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுபதற்கான வாக்கெடுப்பு இன்று
இந்தியா

துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுபதற்கான வாக்கெடுப்பு இன்று

2022-08-06
சபரிமலையில் நிறை புத்தரசி பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!
இந்தியா

சபரிமலையில் நிறை புத்தரசி பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!

2022-08-02
திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!
இந்தியா

திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

2022-08-02
சவூதி நோக்கிச் சென்ற விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமானத்தில் தரையிறக்கம்
இந்தியா

சென்னையின் 2ஆவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிப்பு!

2022-08-02
Next Post
யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

2022-08-11
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்

2022-08-10
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

சீனக் கப்பலைக் கையாண்ட விதம் நாட்டின் நற்பெயருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – மைத்திரி

2022-08-10
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க !

2022-08-10
மட்டு. மகிளூரில் பெண் உயிரிழப்பு – கணவன் கைது!

2272 லீற்றர் எரிபொருள் கையிருப்புடன் 10 பேர் கைது

2022-08-10

Recent News

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இரு தினங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

2022-08-11
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாவிற்கு தாய்லாந்து செல்ல விசா கோரிய இலங்கை அரசாங்கம் – வெளியான முக்கிய தகவல்

2022-08-10
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

சீனக் கப்பலைக் கையாண்ட விதம் நாட்டின் நற்பெயருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் – மைத்திரி

2022-08-10
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க !

2022-08-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.