• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/27
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
72 1
A A
0
அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள்  உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதுடன், சமகால பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு விரைவாக அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டுமென பெந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு  அனைத்து அரச ஊழியர்களுக்கு 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை, சம்பளத்துடன் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. ஆனால், இந்த விடயத்தில்  உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்படவில்லை.

ஆசிரிய நியமனத்துக்கான அனைத்து தகமைகளையும் இவர்கள் முழுமையாக பூர்த்தி செய்துள்ள சூழலில் இன்னமும் இவர்களுக்கு நிரந்தர நியமனமும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இவர்களது முழுமையான திறமையை பாடசாலைகளில் வெளிப்படுத்த சந்தர்ப்பமும் கிடைப்பதில்லை.

இந்த வாரம் நான் பதுளை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட போது, உதவி ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவும் அரசால் வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என  குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

நான் ஊவா மாகாணத்தில்  கல்வி அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில்  90 சதவீதம் ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 10 சதவீதம் 2019 தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை வழங்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. நான் கல்வி அமைச்சராக இருந்த போது ஒரே நாளில் 400 உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுத்திருந்தேன்.

இதனால் நிரந்தர நியமனத்தை வழங்குவது என்பது மிகவும் கடினமாக காரியம் அல்ல என்பதை நான் நன்கு அறிவேன். நியமனம் வழங்கும் முறைமை தாமதமடைவதற்கு காரணங்கள் எதுவும் கிடையாது. ஆனால் இந்த நியமனங்களை வழங்குவத்தில் ஏன் இந்த தாமதம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

மாதா,பிதா,குரு தெய்வம் என்பார்கள். தெய்வத்திற்கு முன்னால் ஆசிரியர்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே விரைவாக இவர்களுக்கு நிரந்தர நியமனங்களை  வழங்க கல்வி அமைச்சு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுடன், 5000 ரூபாய் நிவாரண தொகையையும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: செந்தில் தொண்டமான்நிவாரண கொடுப்பனவு
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?
இலங்கை

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிப்பு!

2022-05-24
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா
இலங்கை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

2022-05-24
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி
இலங்கை

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை

2022-05-24
கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!
இலங்கை

மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவு – உலக சுகாதார ஸ்தாபனம்

2022-05-24
புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம் !
இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலைமட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியாகின !

2022-05-24
நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரசியல் தோல்வியே காரணம்- வேலு குமார்
இலங்கை

நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரசியல் தோல்வியே காரணம்- வேலு குமார்

2022-05-24
Next Post
இலங்கையில் உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடைச்சட்டமே காரணம்- கமல் குணரத்ன

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - கமல் குணரத்ன!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிப்பு!

2022-05-24
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

2022-05-24
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை

2022-05-24
கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!

மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவு – உலக சுகாதார ஸ்தாபனம்

2022-05-24
புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம் !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலைமட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியாகின !

2022-05-24

Recent News

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிப்பு!

2022-05-24
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

2022-05-24
சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை

2022-05-24
கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!

மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவு – உலக சுகாதார ஸ்தாபனம்

2022-05-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.