சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பேரிடர் சூழ்நிலையில், சில பகுதிகளில், மின்மாற்றியின் மீது கூட அதிக எண்ணிக்கையிலான மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மரங்கள் விழுந்து மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் சில பிரதேசங்களுக்கான மின் விநியோகத்தினை ஒழுங்குபடுத்துவதில் சில தாமத நிலைமை ஏற்பட்டதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.