”நாட்டில் எரிபொருளுக்கு எந்த விதத் தட்டுப்பாடு இல்லையென” பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நேற்றைய தினம் (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் காண்பிக்க சில குழுக்கள் செயற்கையான எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.