யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் இரவு (13) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடாத்தியதாக சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.