• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஈரான் – இஸ்ரேல் முழுமையான போர் நிறுத்தம்; தெஹ்ரான் மறுப்பு!

ஈரான் – இஸ்ரேல் முழுமையான போர் நிறுத்தம்; தெஹ்ரான் மறுப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/24
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலும் ஈரானும் திங்களன்று (23) ‘முழுமையான போர்நிறுத்த’ ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேறிய 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்களை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் போர்நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.

போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர்நிறுத்தம் ஏற்படும் என்று முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது – என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி, ஈரான் முதல் கட்ட நடவடிக்கையாக போர்நிறுத்தத்தில் ஈடுபடும். தொடர்ந்து இஸ்ரேலும் 12-வது மணிநேரத்தில் போர்நிறுத்தம் மேற்கொள்ளும். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும்.

12 நாள் போரானது அதிகாரப்பூர்வ முறையில் உலகம் வணங்கும் வகையிலான ஒரு முடிவுக்கு வரும்.

இந்த போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இரு தரப்பினரும் புதிய தாக்குதல்களை அச்சுறுத்திய சில நிமிடங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பின்னர் இது வருகிறது.

Image

போர் நிறுத்தத்தை மறுத்த தெஹ்ரான்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே திங்களன்று போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க ட்ரம்ப் கூறிய நிலையில், தெஹ்ரான் அந்தக் கூற்றை மறுத்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து போர் நிறுத்தம் கோரும் எந்த போர் நிறுத்த முன்மொழிவையும் பெறவில்லை என்றும் அது கூறியுள்ளது.

இதற்கிடையில், போர் நிறுத்தக் கோரிக்கை குறித்து இஸ்ரேல் அமைதியாக உள்ளது மற்றும் அதன் செயல்படுத்தல் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியது.

எக்ஸில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி,

தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த “உடன்பாடும்” இல்லை.

எனினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4.00 (செவ்வாய்) மணிக்குள் நிறுத்தினால், எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் – என்றார்.

Iran ready for dialogue with Gulf states, its deputy FM says | The Times of Israel

எண்ணெய் விலை வீழ்ச்சி

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியதால், செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தன.

இது அப்பகுதியில் விநியோக இடையூறு குறித்த கவலைகளைத் தணித்தது.

பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 0006 GMT மணியளவில் ஒரு பீப்பாய்க்கு $2.69 அல்லது 3.76% குறைந்து $68.79 ஆக இருந்தது.

ஜூன் 11 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும் இது.

அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் பீப்பாய்க்கு $2.7 அல்லது 3.94% சரிந்து $65.46 ஆக இருந்தது.

இது ஜூன் 09 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும்.

ஈரான் OPEC இன் மூன்றாவது பெரிய மசகு எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.

மேலும் பதட்டங்களைத் தளர்த்துவது அதிக எண்ணெயை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் மற்றும் விநியோக இடையூறுகளைத் தடுக்கும், இது அண்மைய நாட்களில் எண்ணெய் விலைகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

Why are crude oil prices rising? Check reasons, outlook & trading strategy | Business Standard

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது.

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது.

எனினும் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கட்டார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவியது.

இந்த நடவடிக்கை குறித்தும் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,

இந்த தாக்குதல் பலவீனமானது மற்றும் எதிர்பார்க்கப்பட்டது என்று அழைத்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் “அழிக்கப்பட்டதை” தொடர்ந்து ஈரான் 14 ஏவுகணைகளை ஏவியதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

அவற்றில் 13 இடைமறிக்கப்பட்டன என்றார்.

Image

Related

Tags: CeasefireDonald TrumpIranIsraelSeyed Abbas Araghchiஇஸ்ரேல்ஈரான்டெனால்ட் ட்ரம்ப்போர் நிறுத்தம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

Next Post

சிறப்பு விமானத்தில் இஸ்ரேலில் இருந்து புறப்பட தயாராகும் 17 இலங்கையர்கள்!

Related Posts

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்
இலங்கை

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்
உலகம்

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

2026-03-20
100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு
இலங்கை

100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

2026-03-20
எரிபொருள் விலை மீண்டும் உயர்த்தப்படுமா? – ஜனாதிபதியின் விளக்கம்!
இலங்கை

எரிபொருள் விலை மீண்டும் உயர்த்தப்படுமா? – ஜனாதிபதியின் விளக்கம்!

2026-03-20
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

2026-03-20
குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்
உலகம்

குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

2026-03-20
Next Post
சிறப்பு விமானத்தில் இஸ்ரேலில் இருந்து புறப்பட தயாராகும் 17 இலங்கையர்கள்!

சிறப்பு விமானத்தில் இஸ்ரேலில் இருந்து புறப்பட தயாராகும் 17 இலங்கையர்கள்!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மன்னார்- உயிலங்குளம் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவர் மீட்பு!

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மிளகாய் தூள் வீசித் தாக்குதல்!

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
edit post
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

0
edit post
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

0
edit post
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

0
edit post
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

0
edit post
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

0
edit post
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

2026-03-20
edit post
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
edit post
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

2026-03-20
edit post
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
edit post
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

2026-03-20

Recent News

edit post
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

2026-03-20
edit post
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
edit post
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

2026-03-20
edit post
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.