தேர்தல் ஆணைக்குழுவானது மூலோபாயத்திட்டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகளை திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் மத்தியில் அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான மற்றும் நெடுந்தீவு பிரதேசத்திற்குட்பட்ட ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்/ யுவதிகளுக்கான E Services தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தினை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும்16 ஆம் திகதி மு.ப 9.30 முதல் மு.ப 11.15 வரை பாடசாலைகளில் கல்வி கற்கும் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான குறித்த நிகழ்வானது யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 11.30 முதல் 12.45 வரை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்/யுவதிகளுக்கான நிகழ்வானது நெடுந்தீவு பிரதேச செயலகத்திலும் நடைபெற உள்ளது.














