ஹூங்கம பகுதியிலுள்ள நேற்றையதினம் (07) வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன.
இதேவேளை, உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவரும் , 28 வயதான பசிந்து ஹெஷான் என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை உயரிழந்தவர், 2024 மார்ச் மாதத்தில் கஹந்தமோதரவில் படகு ஓட்டுநர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இக் கொலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














