வன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் வேகம் எடுத்து வரும் அதே வேளையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையகம் வேகப்படுத்தி வரும் நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் ஆதரவாளராக அறியப்படும் ஒருவரின் கொலை வழக்கில் மொகாமா தொகுதி ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும், முன்னாள் எம் எல் ஏவுமான அனந்த் குமார் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பீஹாரின் பிரபல குற்றக்குழுவின் உறுப்பினராக அறியப்படும் இவர் ஆளுங்கட்சி வேட்பாளராக காணப்படுகிறார்.
இந்நிலையில் இது குறித்து கான்பூரில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்வர் குமார், வன்முறையை தேர்தல் ஆணையகம் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.














