மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலேயே மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














