வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார்.
கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்கு உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
அதன்படி, வவுனியா மாவட்டத்தில் – 077 125 0461, எனும் இலக்கத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் – 077 625 7977எனும் இலக்கத்திற்கு , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் – 077 537 4464 எனும் இலக்கத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் – 077 358 0720 எனும் இலக்கத்திற்கு மன்னார் மாவட்டத்தில் – 076 649 9107 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான சிகிச்சைகளைத் துரிதப்படுத்தவும், இழப்பீடு மற்றும் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் இந்த இலக்கங்களைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.













