இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஊடாக மாத்திரம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய 1750ரூபாய் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.
1750ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறும் நிகழ்வு இன்று (10) மாலை பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம் பெற்றது .
இதன் போது மக்கள் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தனர்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1750ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்கிய நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு மடுல்சீமை பெருந்தோட்ட நிருவனத்திற்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ்பிரிவு தோட்டத்தில் பாற்சோறு சமைத்து கேக்வேட்டி மகிழ்ச்சியினை வெளியிட்டதோடு நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
இதேவேளை, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கலாகிய நாங்கள் ஒவ்வொரு முறையும் சம்பள அதிகரிப்பினை பெருகின்ற போது வீதிக்கு இறங்கி பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமை இதுவரை காலமும் காணப்பட்டது.
இலங்கை நாட்டின் வரலாற்றில் இதுவரை காலமும் எட்டு ஜானாதிபதிகள் இருந்த காலப்பகுதியிலும் எங்களுடைய சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவில்லை ஆனால் 09வது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க வந்தவுடனே மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1750ரூபாய் சம்பளத்திற்கு பெற்று கொடுத்துள்ளார் எனவும் மக்கள் தெரிவித்தனர்













