மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் மேலும் அமெரிக்க உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட முதல் அமெரிக்க வீரர்களில் நான்கு பேரை செவ்வாயன்று (03) அமெரிக்க இராணுவம் அடையாளம் கண்டுள்ளது.
இதுவரை உயிரிழந்த ஆறு அமெரிக்க இராணுவ வீரர்களில், நான்கு வீரர்களும் அமெரிக்க இராணுவ ரிசர்வ் பிரிவின் ஐோவா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குவைத்தின் போர்ட் ஷுய்பாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை ஒரு ட்ரோன் மோதியதில் அவர்கள் இறந்ததாக அமெரிக்க இராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நான்கு பேர் 20 முதல் 42 வயதுடையவர்கள் என்றும், ஐயோவாவின் டெஸ் மொயினஸில் இருந்து 103 ஆவது சஸ்டைன்மென்ட் கட்டளையில் பணியாற்றினர் என்று பென்டகன் கூறியது.
இதேவேளை, ஈரான் மோதலில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு தெஹ்ரான் பதிலடி கொடுக்கும்போது, அமெரிக்க இராணுவத்தினர் அதிக அளவில் உயிரிழக்க நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற மூத்த அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தனது பதிலடி தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 2,000க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் ஏவியுள்ளது என்று அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.















