சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தொழில்நுட்ப நிறுவனங்கள் இனி கடுமையான வயதுச் சரிபார்ப்பு முறைகளைக் கையாள வேண்டும் என ஊடக ஒழுங்குமுறை அமைப்புகள் உத்தரவிட்டுள்ளன.
Facebook, Instagram, TikTok மற்றும் YouTube உள்ளிட்ட தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையில், சிறுவர்கள் தாங்களாகவே வயதைப் பதிவு செய்யும் தற்போதைய முறையை எளிதாகத் தவிர்க்க முடிவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 10 முதல் 12 வயதுடைய சிறுவர்களில் 86 சதவீதமானோர் ஏற்கனவே சமூக ஊடகக் கணக்குகளைக் வைத்துள்ளதாக ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சிறுவர்களின் தரவுகளை முறையற்ற வகையில் கையாள்வது சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ள தரவுப் பாதுகாப்பு ஆணையம், வயது வந்தோருக்கான தளங்களில் பயன்படுத்தப்படும் அதே உயர் ரகச் சரிபார்ப்பு முறைகளை இங்கும் அமுல்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
எனினும், தாம் ஏற்கனவே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வயது குறைந்தவர்களின் கணக்குகளை நீக்கி வருவதாகப் பெரும்பாலான நிறுவனங்கள் பதிலளித்துள்ளன.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் மன்னிப்பு கிடையாது என இங்கிலாந்து தொழில்நுட்பச் செயலாளர் லிஸ் கெண்டல் (Liz Kendall) எச்சரிக்கை விடுத்துள்ளார்














