அமெரிக்காவின் பெரிய விமான நிலையங்களில் இத்தகைய ஆபத்தான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில், ஏர் பிரான்ஸ் போயிங் 777 விமானம் புறப்படத் தொடங்கியபோது, அனுமதி இல்லாமல் ஒரு தனியார் ஜெட் ரன்னவேயில் நுழைந்ததால் புறப்பாட்டை திடீரென நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து FAA விசாரணை தொடங்கியுள்ளது.
விமானம் 100 கிமீ/மணி வேகத்தை கடந்தபோது பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்தன. தரையிறங்கிய தனியார் ஜெட், நிறுத்த கோட்டை மீறி ரன்ன்வேயில் நுழைந்தது. அதிர்ஷ்டவசமாக, ஏர் பிரான்ஸ் விமானம் “decision speed” அடையாததால் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
அதே நாளில், Frontier Airlines நிறுவனத்தின் Airbus A321 விமானமும் மற்றொரு விபத்தை நெருங்கியது. ரன்வேயில் இருந்த இரண்டு சேவை வாகனங்களை மோதாமல் தவிர்க்க, விமானி திடீரென பிரேக் போட்டார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மார்ச் மாதத்தில், நியூயார்க் லா கார்டியா விமான நிலையத்தில் Air Canada விமானம் மற்றும் தீயணைப்பு வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2025 ஜனவரியில், ஒரு இராணுவ ஹெலிகாப்டர் மற்றும் பயணிகள் விமானம் மோதியதில் 67 பேர் உயிரிழந்த சம்பவம், விமான பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
















