நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 28,078 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 234 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை (Open Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த 90 சந்தேக நபர்களும் இந்த அதிரடி சோதனையின் போது சிக்கியுள்ளனர்.
வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் போக்குவரத்து விதிகளை மீறிய பல சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 109 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கவனக்குறைவாகவும் வாகனங்களைச் செலுத்திய 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இத்தகைய விசேட தேடுதல் மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.













