இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 84 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ரயில் நிறுவனம் செவ்வாயன்று (28) தெரிவித்தது.
இதற்கிடையில், இடிபாடுகளில் இன்னும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை மீட்புக் குழுவினர் நிறைவு செய்தனர்.
ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசி என்ற இடத்தில், திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும் ஒரு நீண்ட தூர ரயிலும் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பெண்கள் மட்டுமே பயணிக்கும் பெட்டி ஒன்று இந்த விபத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ஜகார்த்தாவில், பயணிகள் ரயில் சேவைகள் மிகவும் பரபரப்பானவை.
2024-ல் மேற்கு ஜாவா மாகாணத்தில் நடந்த ஒரு ரயில் மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.















